
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மேலதிக வலுவூட்டல்
மனித நேய நம்பிக்கை நிதியமானது எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையுடன் இணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மாணவர்களை வலுவூட்டும் செயற்றிட்டத்தின் ஒரு புதிய அத்தியாயமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்றலுக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் வண்ணம் எமக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கமைவாக மாணவர்களைத் தெரிவு செய்யும் வகையில் மாணவர்களது வீடுகளுக்கான கள விஜயமானது நடைபெற்றது. எமது அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இச்செயற்பாட்டிற்காக…